பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

கொழும்பு, ஏப் 5

இராணுவத்தினரை முறையற்ற விதத்தில் நடத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இராணுவத் தளபதி கோரியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் வீதியில் இடப்பட்டிருந்த வீதித் தடைக்கு அருகில் 4 உந்துருளிகளில் பிரவேசித்த இராணுவத்தினரை, பொலிஸ் அதிகாரிகள் இருவரும் முறையற்ற விதத்தில் நடத்தியதாக இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பொலிஸ்மா அதிபர், உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்பு செயலாளரும், பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாகாப்பு செயலாளர் ஆகியோரிடம் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *