
உக்ரைன்-ரஷியா போர் 42-வது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷிய படையினர் கொடூரமான அட்டூழியங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார்.
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
ராணுவ உதவியாக இருந்தாலும் சரி, மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி, பொருளாதார உதவியாக இருந்தாலும் சரி, உக்ரைனுக்கு எங்களின் வரலாற்று ரீதியான ஆதரவைத் தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் இந்தப் போரிலிருந்து மீள சில காலம் ஆகும் என்றும் அதுவரை அமெரிக்கா உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.