வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் நேற்று (05) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, குருமன்காடு பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 10 கிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மணிபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயது மற்றும் 21 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *