
மின்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள சமயங்களில் புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு வாகன சாரதிகளையும் பாதசாரிகளையும் புகையிரத திணைக்களம் எச்சரித்துள்ளது.
புகையிரத திணைக்கள அத்தியட்சகர் (போக்குவரத்து) ஏ.டி.ஜி செனவிரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில்,
பெரும்பாலான புகையிரத கடவைகள் மின்சாரத்தால் இயக்கப்படும் “பெல் மற்றும் லைட்” பொருத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மின் தடையின் போது, அந்த புகையிரத கடவைகள் மின்கலத்தில் இயங்கும். ஆனால் நீண்ட நேர மின்வெட்டு காரணமாக மின்கலனின் திறன் அடிக்கடி குறைந்து விடுகிறது என்றார்.
எனவே, பெல் மற்றும் லைட் அமைப்புகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம். இதனால் மின்வெட்டு ஏற்படும் போது புகையிரத கடவைகளை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக செனவிரத்ன தெரிவித்தார்.