இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இருதர்பபு உறவுகளையும் மேம்படுத்தும் வகையில் இந்த மாத்தின் இறுதியில் இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் சமீபகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கிளாஸ்கோ காலநிலை உச்சிமாநாட்டின்போது  பிரதமர் மோடி, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோான்சனுக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

குறித்த அழைப்பை ஏற்று அவர் இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *