மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு பசில்? வெளியான தகவல்

வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் வினவிய போது, மீண்டும் பதவி ஏற்க தயாராக இல்லை என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனவும் அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *