வீடுகளை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டத்தை அமுல் செய்தோம்! – புதுக்கதை கூறும் அமைச்சர்

வீடுகளை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டத்தை அமுல்செய்தோம் என இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணரவர்தன தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

விரைவில் நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார். செயலாளரும் நியமிக்கப்படுவார்.

நாட்டில் ஜனநாயக போராட்டம் இடம்பெற்றால் அதை நாம் வரவேற்போம்.

ஆனால் தூண்டல்கள் மூலம் வன்முறையும் இடம்பெறுகிறது.

வீடுகளை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டத்தை அமுல் படுத்தினோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *