
நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. அதற்காக ஒருவர் வந்தார், ஆனாலும் அடுத்த நாளே போய்விட்டார் என இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
நேற்று இடம்பெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் நாட்டின் கொதி நிலை தொடர்பில் கதைக்கப்படவில்லை.
நாட்டில் என்ன நடக்கிறது. திடீரென ஊரடங்கு ,சமூக வலைத்தளங்கள் முடக்கம், அவசரகாலச் சட்டம் எல்லாம் எதற்கு.
காரணங்களை கூறுங்கள். அமைதியாக நடக்கும் போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர்.
நிதி அமைச்சர் இல்லை. ஒருவர் வந்தார் அடுத்த நாளே போய்விட்டார்.
கள்ள வழியில் சேமித்த டொலர்கள் எங்கே.பண்டோரா நிதி முழுவதும் இங்கே வந்து சேர வேண்டும்- என்றார்.