
கொட்டும் மழைக்குள்ளும் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
கொழும்பு விஜேயராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லம் நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்று மாலை போராட்டத்தை ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கு ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதன் காரணமாக பிரதமரின் இல்லத்தைச் சுற்றி பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேவேளை நேற்றுமுன்தினம் இரவு தங்காலையில் உள்ள பிரதமரின் கார்ல்டன் இல்லம் சுற்றி வளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.