
ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் #GoHomeGota கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தற்போது இடம்பெற்றுவரும் விவாதத்தின்போதே இவ்வாறு கோஷம் எழுப்பட்டுவருகின்றது.
இதேவேளை பசில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும் எதிர்க்கட்சியினர் தற்போது கோஷம் எழுப்பிவரும் நிலையில் இன்றைய தினம் ஏற்கனவே 10 நிமிடம் சபை ஒத்திவைக்கபட்டிருந்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.