
பாணந்துறை, ஏப் 06
பாணந்துறை ஸ்ரீ சுமங்கல மகளிர் வித்தியாலயத்தின் வகுப்பறையை உடைத்து ரூ.500,000 அதிக பெறுமதியுடைய இசைக்கருவிகளை செவ்வாய்க்கிழமை இரவு திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இசைக்கருவிகள் வைக்ககப்பட்டிருந்த வகுப்பறையின் பின்பக்க ஜன்னலை உடைத்து பல இசைக்கருவிகளை திருடியதாக ஆசிரியரின் முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 34 வயதான பாடசாலையின் பின்புறத்தில் வசிக்கும் நபர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.