உக்ரைன் முழுவதும் குழந்தை இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது

ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் குறைந்தது 167 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 279 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷெல் மற்றும் குண்டுவீச்சு காரணமாக சுமார் 927 பாடசாலைகள் மற்றும் பிற கல்வி நிலைய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் அதிக எண்ணிக்கையில் குறிப்பாக சுமார் 81 குழந்தைகள் இருந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து கிய்வ் பகுதியில் 78 குழந்தைகளும் கார்கிவ் பிராந்தியத்தில் 64 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *