இலங்கையில் விமான நிலையம் இழுத்து மூடப்படும்! கைதுகள் அதிகரிக்கும்! – எம்.எம்.நிலாம்டீன்

நாடாளுமன்றம் கைமாறுகின்ற போது நிச்சயமாக விமான நிலையம் இழுத்து மூடப்பட்டு சந்தேகத்திற்கு உரியவர்கள் கைது செய்யப்படலாம் என இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.

இந்த விடயத்தை ஜே.வி.பி மிகவும் மும்முரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி ஆளும் தரப்பாக மாறும் வாய்ப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. சீனாவின் பக்கமும் அவர்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஜே.வி.பி ஆளுந்தரப்பாக அல்லது ஆட்சியின் மிகப்பெரும் பங்காளியாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே ராஜபக்சர்களில் ஊழல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அவர்கள் நாடாளுமன்றில் வலியுறுத்தி வருகின்றார்கள்.

இதையெல்லாம் அறிந்து மோப்பம் பிடித்து முன்கூட்டியே இங்கிருந்து செல்வது நல்லதென்றே பலர் வெளியேறி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *