
நாட்டில் இன்று ராஜபக்ஷ குடும்பத்தினர் பரப்பிய நோய்தான் இன்று இவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவாகி உள்ளது என நாடளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையிலி இன்று தெரிவித்துள்ளார்.
மிரிஹான சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்தனர் அதற்கான விசாரணை அறிக்கை எங்கே. ஏற்பட்ட சேததிற்கு இழப்பீடு வழங்கப்பட்டதா. நேற்று இருவர் இராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் வந்தனர்.
யார் அவர்கள். இதிலிருந்து அரசாங்கம் கூலிப் படையை உருவாகியுள்ளனர் என்று தெரிகின்றது.
பொலிஸ் அமைச்சர் இல்லாவிடினும் அதிகாரிம் உள்ளது அரசாங்கத்திடமே எனவே மிரிஹான சம்பவம் குறித்து தீர்வு தாருங்கள்.
ராஜபக்ஷ குடும்பத்தினரை வீட்டிற்கு செல்லுங்கள் என்கின்றனர். நேற்று இவ்விடத்தில் விவாதம் இடமபெற்றது. அவசரகால தடைச்சட்டம் எதற்கு கொண்டு வரப்பட்டது.தம்மை பாதுகாத்துக்கொள்ளவே அரசு செயற்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.