
விடுதலைப் புலிகளை அழித்து இன்று நீங்களும் அழிந்து விட்டீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக ஆட்சியை எதிர்த்து, ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என சிங்கள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எதிர்க்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. ஏன் என்றால் எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவோம் என அறிவித்துள்ளனர்.
ஆகவே பெரும்பாண்மை இல்லாமல் போய்விட்டது. இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமையுங்கள்.
அன்று புலிகளை அழித்து இன்று நீங்களே அழிந்துவிட்டீர்கள்.அடுத்த ஜனாதிபதி யார் என்றே தெரியவில்லை- என்றார்.