ஜனாதிபதியும் பிரதமரும் பொதுமக்களிடம் உரையாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை

நாடு இக்கட்டான சூழலை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதியும் பிரதமரும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக பொது மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கம், மக்களின் அவலங்கள் தொடர்பில் உணர்வற்றது போல செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பால்மா, எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்றி பொதுமக்கள் வரிசையில் நிற்கும் போது, ஹோ ஹோம்​​ கோட்டா என்ற கோஷங்களும், ராஜபக்சக்களை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் அனைத்தும் நன்றாக இருப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் பாசாங்கு செய்வதாக அவர் தெரிவித்தார்.
மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவையில் பிரதமர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்ததாகவும், அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடத் தவறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *