
வாழைச்சேனை, ஏப் 06
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 3 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 3 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் புணாணை மியான்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா தொகையினை கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு வியாபாரத்திற்காக இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நிலையில் புணாணை மியான்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.