
நாட்டை ஆள்வதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்று நீங்கள் கூறுகிறீர்கள், அப்போது ஏன் அமைச்சுப் பதவிகளை இராஜனிமா செய்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டம் ஓயாது. நாடு வங்குரோத்து அடைந்துவிட்டது. நிதி அமைச்சர் இல்லை. நாட்டில் ஒன்றுமே இல்லை. ஜனாதிபதி விலக வேண்டும். அவருக்கு மக்கள் சொல்வது கேட்கவில்லை என்றால் நீங்களே அவருக்கு சொல்லுங்கள். இன்னும் இந்த நிலைமை மோசமடையும். நாணய நிதியத்துக்கு செல்ல அமைச்சர் இல்லை.- என்றார்.