
மொட்டுக் கட்சியில் இருக்க வேண்டும் என்றால் கொள்ளையடிக்க வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
225 நாடளுமன்ற உறுப்பினர்களையும் வெளியே அனுப்புவதற்கு மொட்டுக் கட்சி முடிவு செய்துள்ளது. இவர்கள் விலகும் வரை மக்கள் போராட்டம் ஓயாது. போராட்டங்களை குழப்புவதற்கு அரசு ஆட்களை இறக்குகின்றனர்.
கொழும்பு வாழ் மக்களே நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம். கோட்டாவின் எண்ணம் இதை கலவர பூமியாக மாற்றுவதே. அமைச்சர்கள் பதவி விலகி விட்டால் ஏன் அரச வாகனத்தை பயன்படுத்துகிறீர்கள்.- என்றார்.