சுகாதாரத் துறையினர் கவனவீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் சேர்ந்து கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று நண்பகல் மேற்கொண்டிருந்தனர்.

மருத்துவமனையிலிருந்து பேரணியாக மருத்துவமனை நுழைவாயில் வரை சென்று வீதியில் கவனவீர்ப்பு இடம்பெற்றது.

“மருந்துகள் இல்லை”, “சுகாதார கட்டமைப்பு சீர் குலைந்துள்ளது”, “இலவச சுகாதாரம் இல்லாது ஒழிக்கப்படுகின்றது” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *