
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சில வர்த்தகர்கள் தேவையில்லாமல் அதிகரித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை இதனை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து நாளாந்தம் பெருமளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அதற்கமைய பரிசோதனைகள் நடத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.