
கொழும்பு, ஏப் 06
நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கான இயலுமை இன்மையினாலேயே, நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.