எழுவைதீவில் மக்கள் எழுச்சி – அச்சத்தில் நில அளவை திணைக்களத்தினர் தப்பியோட்டம்

இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எழுவைதீவு கிராமத்தில் இறங்குதுறை பகுதியில் அமைந்துள்ள பெண்ணொருவருக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் காணியை சிறிலங்கா கடற்படையினருக்கு சொந்தமாக்குவதற்காக நில அளவை திணைக்களத்தினர் மேற்கொண்ட முயற்சியினை எழுவைதீவு மக்களும் தமிழரசுக் கட்சி ஊர்காவற்றுறை தொகுதி கிளையினரும் இணைந்து முறியடித்தனர் .

இன்று காலை ஒன்பது மணியளவில் மேற்படி காணியை அளவீடு செய்து சுவீகரிப்பதற்காக நில அளவை திணைக்களம் தீர்மானித்திருந்தது.

ஆனாலும் இதனை தடுப்பதற்காக எழுவைதீவில் பொதுமக்களும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரும் (இலங்கை தமிழரசுக் கட்சி) பெருமளவில் குழுமியிருந்ததால் காணியை அளவீடு செய்யும் திட்டத்தினை கைவிடுவதாக நிலஅளவை திணைக்களத்தினர் தீர்மானித்து இடைநடுவில் திரும்பிச் சென்றனர்.

காணி சுவீகரிப்புக்கெதிரான போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி முக்கியஸ்தர்களான கருணாகரன் குணாளன், அம்பலம் கனகையா, மடுத்தீன் பெனடிக்ற் (சின்னமணி), சிவநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *