
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஊழல்வாதிகளை தெரிவு செய்யாமல் இருக்க பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகள் சிறையில் உள்ளவர்கள், பாராளுமன்றத்தில் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு பலவீனமானது. சுதந்திரமாக இருக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும்.
ஆட்சி மாறும்போது வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அதிகாரிகள் அரசாங்கத்திற்கு பதிலளிக்க வேண்டியவர்கள் அல்ல, ஆனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பொறுப்பானவர்கள்.
சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் சார்பாகவே செயற்படுவதாகவும் அது ஒரு சுயாதீனமான அமைப்பல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.