போராட்டத்தில் இளையோரது பேச்சை கேட்டு கண்ணீர் மல்கிய பொலிஸார்!

இலங்கை டொலர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில் விலைவாசியும் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக சில நாட்களாக பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் ஏப்ரல் 1 முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போது இளையோரது பேச்சை கேட்டு பொலிஸார் கண்ணீர் மல்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *