நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மக்களின் நாளாந்த தேவைக்கு ஏற்ற அளவில் நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் மேற்படி மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மட்டுப்படுத்தப்பட்டளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையினை கருத்தில்கொண்டு பொது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *