
கொழும்பு, ஏப் 6
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 1,412 மில்லியன் டொலர் பெறுமதியான 33 முதலீட்டு யோனைகள் கிடைக்க பெற்றுள்ளன.
இலங்கை முதலீட்டு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி ஆகிய முதலீடுகளும் அதில் அடங்குகின்றன.
கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 80 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.