ஜோன்ஸ்டனின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் – குருநாகல் மேயர்

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடியைக்கூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என குருநாகல் மேயர் சவால் விடுத்துள்ளார்.

குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குருநாகல் மேயர் அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்.

இதன்போதே, ஜோன்ஸ்டன் தலைமுடியைகூட யாரையும் தொடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினைச் சேர்ந்த அல்லது யாரேனும் குருநாகலில் உள்ள ஜோன்ஸ்டனின் அலுவலகத்திற்கு வருமாறு தாங்கள் சவால் விடுவதாகவும் மேயர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *