தடையின்றி கடமைகளை நிறைவேற்றுமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

நாட்டிலுள்ள பெரும்பாலான அமைச்சுகள், அமைச்சர்கள் இன்றியே செயற்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இடையே நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அனைத்து அமைச்சுகளின் நடவடிக்கைகளையும் திட்டமிட்டவாறு தடையின்றி மேற்கொள்ளுமாறு, இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

புதுவருட காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களை ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *