கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய ஜனாதிபதியினால் விஷேட குழு நியமனம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்.

ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக  இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான வைத்தியர் இந்திரஜித் குமாரசுவாமி.
பேராசிரியர் சாந்தா தேவராஜன், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயிற்சி பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் ழவத்தியர் ஷர்மினி கூரே உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.

ஜனாதிபதி ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டதில் இருந்து, குழுவின் உறுப்பினர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் முக்கிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் ஒரு சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். மேலும் அது தொடர்பான தேவைகளுடன் தொடர்ந்து தொடர்பிலும் உள்ளனர்.

ஜனாதிபதியின் ஆலோசனைக் குழு மேற்கொள்ளும் பொறுப்புகளில், தொடர்புடைய இலங்கை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஈடுபடும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், தற்போதைய கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து, இலங்கையின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கு வழிவகுக்கும் வழிகாட்டல்களை வழங்குதல் என்பன .

ஜனாதிபதியின் ஆலோசனைக் குழு மேற்கொள்ளும் பொறுப்புகளில், தொடர்புடைய இலங்கை நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஈடுபடும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், தற்போதைய கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்து, இலங்கையின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கு வழிவகுக்கும் வழிகாட்டல்களை வழங்குதல் என்பன குழுவின் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *