
கொழும்பு, ஏப் 07
அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக்காலத்தின் போது அவசியமற்ற வகையில் சில வர்த்தகர்கள் அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அதற்கமைய பரிசோதனைகள் நடத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.