அரச, தோட்ட மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச, அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

நாளை தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி போராட்டம் நடத்தப்படும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரான சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டால்இ அதற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *