மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஐந்து வயது சிறுமி உயிரிழப்பு!

கேகாலை – பின்னவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெல்லிவல பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார் என பின்னவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியொன்றில் கலந்துகொண்டு விட்டு சிறுமி தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமியை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *