மீண்டும் நிதி அமைச்சராக விரும்பும் மஹிந்த!

வெற்றிடமாகவுள்ள நிதியமைச்சர் பதவியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, மஹிந்த ராஜபக்ஷ விரைவில் நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சு பதவி ஏற்க அரசாங்கத்தின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வராத சூழ்நிலையில் அவரது குடும்பத்தாரின் பலமான கோரிக்கைக்கு அமைவாக மீண்டும் மஹிந்த பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, அரசாங்கத்தின் பெரும்பான்மையினரின் சம்மதத்துடன் பிரதமரே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *