ரூ. 70 லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு, ஏப் 07

கடவத்தை-பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ரூ. 70 லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி பேலியகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைய குறித்த வீட்டிலிருந்து 710 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபர், களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *