மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், மக்களின் ஏமாற்றம் நியாயமானது – அலி சப்ரி

<!–

மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், மக்களின் ஏமாற்றம் நியாயமானது – அலி சப்ரி – Athavan News

மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதையம் புரிந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு தனிப்பட்டமுறையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் நாட்டை மீட்டெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *