நாட்டின் பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு நாடு பூராகவும் இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இனவாதத்தால் நாட்டை நாசமாக்கியது போதும், எமது சிறார்களுக்காய் இலங்கையை பாதுகாப்போம், லோன் லீசிங் செலுத்த முடியாது நிவாரணம் வழங்கு, 74 வருட அரசியல் சாபத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் போன்ற வாசகங்களை ஏந்தியும் ஹோ ஹோம் ஹோட்டா போன்ற வாசகத்தையும் ஏந்தி கோசங்களை எழுப்பியிருந்தனர்.
பின்னர் பிரதான வீதி வரை கோசங்களை எழுப்பி நடை பவணியாக தங்களது ஆதங்கங்களை அரசாங்கத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். இதில் பொது மக்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

