மக்களின் ஏமாற்றம் நியாயமானது – மன்னிப்பு கோரிய அலி சப்ரி

மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதையம் புரிந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு தனிப்பட்ட முறையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் நாட்டை மீட்டெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தல வீரசுங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று நாடு திரும்பியதும் தனது கடமைகளை பொறுப்பேற்பார் எனவும் அலி சப்ரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *