இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சனத் ஜெயசூரியா

கொழும்பு, ஏப் 06

பொருளாதார நெருக்கடிச் சூழலில் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா நன்றி தெரிவித்துள்ளார்.

எரிவாயு, மின்சாரம் இல்லாததால் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணாவிட்டால் இது பேரழிவாக மாறிவிடும் என்றும், இதற்குத் தீர்வுகாணும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழும் என ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *