ஒடுக்கு முறைக்கு செல்லவேண்டாம் படையினர் மற்றும் காவல்துறைக்கு பாராளுமன்றில் கோரிக்கை.

ஒடுக்கு முறைக்கு செல்லவேண்டாம் என்று படையினரையும் காவல்துறையினரையும் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜயரத்ன இந்தக் கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.

தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி அரசியல் கட்சிகளில் யாரையாவது பிரதமராக கொண்டு நிர்வாகம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.

இந்த நிர்வாகம் மூலமே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *