தனமல்வில பகுதியில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லொறியும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *