மெழுகுவர்த்தியை நம்பியிருக்கும் வைத்தியசாலை! இலங்கையில் அவலம்

பொலன்னறுவை – மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலை, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்தடை காரணமாக பாரியளவில் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெழுகுவர்த்தி ஏந்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தாலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. டீசல் இல்லாததால் மற்ற ஜெனரேட்டரை இயக்க முடியவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *