
கைப்பேசி கேம் விளையாட்டால் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக உடுதும்பர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடுதும்பர, ஹாலியால பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 5ஆம் திகதி சிறுவன் ஒருவன் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய உடுதும்பர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் கையடக்க தொலைப்பேசி விளையாட்டுக்கு அடியாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தாய் கண்டித்ததால் சமையலறையின் கூரையில் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த சிறுவனின் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.