
எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவரையும் மன்னித்து உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்து நிற்கின்றேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எனது அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணமான நபர் நாட்டை நாளாந்தம் அழித்துக்கொண்டிருப்பதை நான் அச்சத்துடன் பார்த்த வண்ணமிருக்கின்றேன்.
எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவருக்கும், நான் உங்களை மன்னித்து உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்துநிற்கின்றேன்.
நாங்கள் ஐக்கியப்பட வேண்டிய தருணம் இது. மாற்றத்திற்காக குரல்கொடுக்கும் மில்லியன் கணக்கான குரல்களின் எதிரே எதனாலும் நிற்கமுடியாது- என்றார்.