இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கு 52 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது!

சுமார் இரண்டு வாரங்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றி வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் தொகையை விடுவிப்பதற்காக 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *