பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பு, ஏப் 08

இந்த பண்டிகைக் காலத்தில் பெருமளவிலான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளதை காணமுடிவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் இன்று (08) பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், வாகன சாரதி அந்தப் பகுதிகளுக்குப் பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *