அத்தியாவசிய மருந்துகள் தனியார் துறைவசம் கையிருப்பில் உள்ளதாக தெரிவிப்பு

அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாடின்றி தனியார் துறைவசம் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அதன் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களுக்கான தையல் இழைகள் மற்றும் இருதய நோயாளர்களுக்கான ஸ்டென்ட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மருந்துப் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க, நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டு பல உயிர்காக்கும் மருந்துகள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *