புச்சா நகரை விட போரோட்யங்கா பகுதியில் மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு!

<!–

புச்சா நகரை விட போரோட்யங்கா பகுதியில் மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு! – Athavan News

உக்ரைனில் ரஷ்யப் படையினரால் புச்சா நகரில் பொதுமக்கள் மோசமாக கொல்லப்பட்டிருப்பதை விட போரோட்யங்கா பகுதியில் அதைவிட மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

முகநூல் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘புச்சாவை காட்டிலும் அங்கு நிலைமை மோசமாகவுள்ளது. ரஷ்ய ஆக்ரமிப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என கூறினார்.

புச்சா மற்றும் போரோட்யங்கா ஆகிய இரண்டுமே உக்ரைன் தலைநகர் கீவ்வின் புறநகர் பகுதிகள். கீவ்வை கைப்பற்ற அங்கு கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *