
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் சில பகுதிகளில் நீண்ட எரிபொருள் வரிசையும் காணப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் விரைவில் மருந்துக்காக வரிசையில் காத்திருக்கவேண்டிய ஏற்படும் என மட்டக்களப்பு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் வைத்தியர் எம்.ஏ.சுஹைர் அகமட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றையதினம் மட்டு போதனா வைத்தியசாலை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துக்கள் இல்லாமல் சீரழிந்துவருகின்றது.
மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன’ எனும் தொனிப் பொருளில் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் வைத்தியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் வைத்தியர் வைத்தியர் எம்.ஏ.சுஹைர் அகமட்,
நாட்டில் சுகாதார சேவையானது இலவச சுகாதார சேவை இன்று வரை காணப்பட்டு வருகின்றது இந்த நிலையில் இலங்கையின் மோசமான இந்த பொருளாதார முகாமைத்துவமானது இன்று சுகாதார சேவையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மோசமான நிதி முகாமைத்துவத்தினால் அரசாங்க வைத்திய சாலையில் அஸ்பிறின் போன்ற அடிப்படை மருந்துகளும் மொத்தமாக வைத்தியசாலைகளில் இல்லாமல் உள்ளதுடன் ஏனைய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நோயாளிகள் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் சத்திரசிகிச்சைகள் அதிகமான வைத்தியசாலையில் பிற்போடப்பட்டுள்ளதுடன் அவசர சத்திரசிகிச்சை மாத்திரமே இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலை தொடருமாக இருந்தால் இன்னும் சில வாரங்களில் இலவச சுகாதார சேவைகள் முற்று முழுதாக முடக்கப்படும் இதனால் இலங்கையில் வாழும் ஏழை மக்கள் இதன் மூலம் பாரிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டிவரும்.
எங்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய மருந்து வழங்கும் அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி இன்னும் இலங்கையில் சிலவாரங்களுக்கான மருந்துகள் மாத்திரதே உள்ளதாகவும் எனவே இதன் காரணமான கிளினிக் போன்ற முக்கியமான துறைகளில் நோயாளிகள் மருந்துக்களை பெற்றுக் கொள்ள இப்போது மக்கள் எரிபொருள் எரிவாயுக்களுக்கு வரிசையில் நிற்பது போல வரிசையில் வைத்தியசாலைகளிலும் தனியார் பாமசிகளிலும் காத்திருக்கவேண்டிய மிக கஷ்டமானநிலை ஏற்படும் என்றார்.