
கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாக இருந்தது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த பதிவில், கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாக இருந்ததாகவும், இந்த ஏப்ரல் மாதத்தையும் அவ்வாறு மாற்ற முயற்சிக்கும் மற்றும் சவால் விடும், ஆவணத்துடன் பேசுபவர்கள் அனைவரையும் அகிம்சை மற்றும் அன்பினால் தோற்கடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.